செய்திகள்
வெம்பாக்கம் அருகே பைக் மீது லாரி மோதி நெசவு தொழிலாளி பலி
வெம்பாக்கம் மாமண்டூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் நெசவு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் மாமண்டூர் அருகே உள்ள தர்மாபுரம் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 35). நெசவு தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து பைக்கில் மாமண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மாமண்டூர் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கி நந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த தூசி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம் மாமண்டூர் அருகே உள்ள தர்மாபுரம் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 35). நெசவு தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து பைக்கில் மாமண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மாமண்டூர் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கி நந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த தூசி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.