செய்திகள்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் போராட்டம்

Published On 2018-11-09 10:19 GMT   |   Update On 2018-11-09 11:35 GMT
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். #demonetisation #thirunavukkarasar #congress

சென்னை:

மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மூன்றாம் ஆண்டான இந்த வருடமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடி கோடியாக பணம் வரும் என்று சொல்லி பணம் மதிப்பிழப்பின் மூலம் மக்களை தெரு கோடிக்கு கொண்டு வந்து விட்டது மோடி அரசு. மோடி பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறார்.

தற்போது எதிர்ப்பு அலை தான் வேகமாக வீசுகிறது. வருகிற தேர்தலில் மோடி ஆட்சியை காங்கிரஸ் வீழ்த்துவது உறுதி. இதற்காக மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கும்.

எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் நலிவடைந்துள்ளது. இந்த அரசு அகற்றப்பட்டால் தான் நாடு முன்னேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், டாக்டர் செல்லக்குமார், விஜயதரணி எம்.எல்.ஏ. தணிகாசலம், கஜநாதன், தாமோதரன், அசன் ஆரோன், சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்க் சிவராஜசேகர், வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம் மற்றும் நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், பி.வி.தமிழ்செல்வன், தணிகைவேல், பிரகாஷ், துரைசிங், ஜெகன், நாச்சிகுளம் சரவணன், தி.நகர் விக்னேஷ்வரன், சாம்டெனிசன், வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ்பாண்டியன், இல.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #demonetisation #thirunavukkarasar #congress

Tags:    

Similar News