செய்திகள்

வெள்ளவேடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2018-11-07 10:08 GMT   |   Update On 2018-11-07 10:08 GMT
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நடத்திய வாகன சோதனையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைதானார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நேற்று இரவு சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரைக் கண்டதும் ஓடத் தொடங்கினார்.

போலீசார் அவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவரது பெயர் பிரேம்நாத் (23) குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News