செய்திகள்

தஞ்சை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2018-10-27 11:08 GMT   |   Update On 2018-10-27 11:08 GMT
தஞ்சை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த ஆலக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீமராஜ் (வயது 45). விவசாயி. இவரது 4-வது மகள் நிஷா (16).

இவர் ஆலக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் மனமுடைந்த நிஷா வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News