செய்திகள்
தென்காசி அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
தென்காசி அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி அருகே உள்ள இலத்தூரை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது27). இவர் அந்த பகுதியில் மாடு மேய்த்து வந்தார். நேற்று மாடுகளை குளிப்பாட்ட அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குட்டைக்குள் இறங்கினார். அப்போது மதன்குமாருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதில் தண்ணீரில் விழுந்த மதன்குமார் சம்பவ இடத் திலேயே நீரில் மூழ்கி பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.