செய்திகள்
மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்
பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். #Rajini #MeToo
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என்கின்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து வாராணாசியில் இருந்து இன்று சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை எனவும், கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், அதே சமயம் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும், பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajini #MeToo
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என்கின்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து வாராணாசியில் இருந்து இன்று சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை எனவும், கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், அதே சமயம் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும், பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajini #MeToo