போத்தனூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
கோவை:
கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவிகா.வேலைக்கு செல்லும் கண்ணன் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது கண்ணன் மனைவியை மிரட்டுவதற்காக தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவார்.
அவ்வாறு 2 முறை தற்கொலை செய்ய முயன்ற போது தேவிகா அவரை காப்பாற்றி உள்ளார். சம்பவத்தன்று கண்ணன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார். பின்னர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து தேவிகா அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கண்ணனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.