செய்திகள்

மதுரை அருகே மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர் தற்கொலை

Published On 2018-10-14 11:21 GMT   |   Update On 2018-10-14 11:21 GMT
மதுரை அருகே மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம் செல் லம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அம்சமுத்து (வயது56). இவரது மனைவி கடந்த 1-ந்தேதி இறந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சமுத்து யாருடனும் பேசாமல் கண் ணீருடன் அழுதப்படி இருந் தார்.

இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அம்சமுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக அம்சமுத்துவின் சகோத ரர் பரமேஸ்வரன் செக்கா னூரணி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவநேசன் வழக்குப் பதிவு செய்து அம்சமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலூர் அழகிரிப் பட்டியை சேர்ந்தவர் பழனி (55). இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-மேலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒத்தக் கடை தேவர் சிலை அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பழனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுதொடர்பாக ஒத்தக் கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News