என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madurai elderly suicide"
மதுரை:
மதுரை மாவட்டம் செல் லம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அம்சமுத்து (வயது56). இவரது மனைவி கடந்த 1-ந்தேதி இறந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சமுத்து யாருடனும் பேசாமல் கண் ணீருடன் அழுதப்படி இருந் தார்.
இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அம்சமுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அம்சமுத்துவின் சகோத ரர் பரமேஸ்வரன் செக்கா னூரணி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவநேசன் வழக்குப் பதிவு செய்து அம்சமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலூர் அழகிரிப் பட்டியை சேர்ந்தவர் பழனி (55). இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-மேலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒத்தக் கடை தேவர் சிலை அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பழனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக ஒத்தக் கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்