செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
உடுமலையில் 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மைவாடி கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(48).தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி முருகசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மைவாடி கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(48).தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி முருகசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews