செய்திகள்

பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கடத்திய கும்பல்

Published On 2018-09-26 13:05 GMT   |   Update On 2018-09-26 13:05 GMT
பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

மேலும் இளம்பெண்ணை கக்கன்ஜி நகரை சேர்ந்த சின்னக்காளை. இவரது மனைவி மற்றும் மகன் சின்னச்சாமி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசில் அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News