செய்திகள்

நடத்தையில் சந்தேகத்தால் தகராறு: கணவரை கத்தியால் குத்திய மனைவி

Published On 2018-09-23 17:17 GMT   |   Update On 2018-09-23 17:17 GMT
குடும்ப தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கே.புதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகிபாலன் (வயது 41). திருமணமான இவர் 2004-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

அதன்பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சரளாதேவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சரளாதேவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மகிபாலன் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரளாதேவி கத்தியால் மகிபாலனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News