செய்திகள்
தஞ்சை தொழில் அதிபரை கொல்ல முயற்சி- கூலிப்படையை ஏவிய 5 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 5 டாக்டர்கள் சிக்கி இருப்பது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் தஞ்சையில் அபி அண்ட் அபி என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோருமையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இளங்கோவன், தனது மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற போர்வெல் பணிகளை பார்வையிட்டார்.
அந்த சமயத்தில் திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை, கும்பல் அரிவாளால் வெட்டினர். கை, கால், தலையில் வெட்டப்பட்ட இளங்கோவன் கூச்சல் போட்டு அலறினார்.
உடனே சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வந்ததால், மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த இளங்கோவனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பெரியசாமி, ராஜகோபால், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது இந்த தனிப்படை போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தஞ்சை திலகர் திடலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் பாரதிமோகன் மற்றும் ஆனந்த சேகர் உள்பட 5 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 5 டாக்டர்களும், இளங்கோவனை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.
இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த முருகன், திருமங்கல கோட்டை பகுதியை சேர்ந்த கவுதமன், சூரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
தஞ்சை அருளானந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் தஞ்சையில் அபி அண்ட் அபி என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோருமையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இளங்கோவன், தனது மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற போர்வெல் பணிகளை பார்வையிட்டார்.
அந்த சமயத்தில் திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை, கும்பல் அரிவாளால் வெட்டினர். கை, கால், தலையில் வெட்டப்பட்ட இளங்கோவன் கூச்சல் போட்டு அலறினார்.
உடனே சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வந்ததால், மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த இளங்கோவனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பெரியசாமி, ராஜகோபால், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது இந்த தனிப்படை போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தஞ்சை திலகர் திடலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் பாரதிமோகன் மற்றும் ஆனந்த சேகர் உள்பட 5 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 5 டாக்டர்களும், இளங்கோவனை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.
இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த முருகன், திருமங்கல கோட்டை பகுதியை சேர்ந்த கவுதமன், சூரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews