செய்திகள்
நண்பர்கள் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன்
மதுரையில் பள்ளி நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Madurai
மதுரை:
மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர், பள்ளி விடுமுறை என தமது பள்ளி நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளான். இதனை நம்பிய மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால், இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் வசம் சென்றது.
விசாரணையில், இந்த மாணவர் அனுப்பிய குறுந்தகவலை நம்பியே அனைவரும் பள்ளி வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை பள்ளி மாணவர்களும் திட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, 14 வயது சிறுவன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அவனது பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் செய்த தவறுக்காக நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Madurai
மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர், பள்ளி விடுமுறை என தமது பள்ளி நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளான். இதனை நம்பிய மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால், இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் வசம் சென்றது.
விசாரணையில், இந்த மாணவர் அனுப்பிய குறுந்தகவலை நம்பியே அனைவரும் பள்ளி வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை பள்ளி மாணவர்களும் திட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, 14 வயது சிறுவன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அவனது பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் செய்த தவறுக்காக நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Madurai