செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே விஷம் குடித்து கட்டிடத்தொழிலாளி தற்கொலை

Published On 2018-08-28 16:13 GMT   |   Update On 2018-08-28 16:13 GMT
ஊத்துக்கோட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கட்டிடத்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கரமனூர்கண்டிகை கிராமம் மேட்டுகாலனி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முரளி(வயது 37). கட்டிடத்தொழிலாளி. இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்த முரளி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான முரளிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 
Tags:    

Similar News