செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தங்கை அவரது காதலனுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனவேதனையடைந்த வெங்கடேசன், அங்குள்ள பழமை வாய்ந்த கோட்டை அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் பாடாலூரை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை, விவசாயி. சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.