செய்திகள்

திருவட்டார் அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2018-08-11 15:04 GMT   |   Update On 2018-08-11 15:04 GMT
திருவட்டார் அருகே பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திருவட்டார்:

திருவட்டார் அருகே தோப்புவிளை செங்கோடியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 22). இவருக்கும் நாகர்கோவில் பீச்ரோட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயலட்சுமி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த 9-ந் தேதி ஜெயலட்சுமி, குழந்தைகள் இருவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஜெயலட்சுமியை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதறிபோன ஜெயலட்சுமியின் தந்தை குமார், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெண் மாயம் என வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News