செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து சேதம்
திருக்காட்டுப்பள்ளி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின்சார வயர் உரசியது. இதில் வைக்கோல் எரிந்து சேதம் அடைந்தன.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டி பகுதியில் வயல்களில் இருந்து வைக்கோலை விலைக்கு வாங்கி திருச்சி, துறையூர் பி.மேட்டுர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (48) என்பவர் தனது லாரியில் ஏற்றி மெயின் ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வயல்களில் நடுவில் சென்ற மின்சார வயரில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றி கொண்டது.
லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையில் வீரர்கள் அருண்கணேசன், ராஜா, பிரசாத், ராகுல், ராம்குமார், தனுஷ் ஆகியோர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியின் டயர்கள் மட்டும் தீயில் கருகின.