செய்திகள்

உடன் பிறப்புக்களின் கண்ணீர் கடலில் மிதந்து சென்றார் கலைஞர் கருணாநிதி

Published On 2018-08-08 11:29 GMT   |   Update On 2018-08-08 11:38 GMT
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பல்லாயிரக்கணக்கான உடன் பிறப்புக்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
சென்னை :

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட ராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக  மெரினாவுக்கு  கருணாநிதியின் உடல்  ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றது. சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது.பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
Tags:    

Similar News