செய்திகள்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜனாதிபதி

Published On 2018-08-05 09:27 GMT   |   Update On 2018-08-05 10:02 GMT
காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #PresidentKovind
சென்னை:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராகுல் காந்தி காந்தி ஆகியோர் மட்டும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். மற்ற தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

பின்னர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி கைகளை காட்டினார். பின்னர் காரில் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

இது தொடர்பாக ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளதாவது:-


Tags:    

Similar News