செய்திகள்
திருச்சியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி கோட்டை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.
இதில் கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இணை பொறுப்பாளர்கள் இல.கண்ணன், சிவசாமி, கோட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொது செயலாளர்கள் பாலன், மோகன், சரவணன், மண்டல தலைவர் மகேந்திரன், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பார்வதி நடராஜன், லீமா சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி சுசீலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.