செய்திகள்
விளாத்திகுளம் அருகே விபத்தில் தந்தை, மகள் காயம்
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகேயுள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது55). இவரது மகள் மனுஸ்ரீ (16). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த மனுஸ்ரீ நேற்று நாமக்கல்லுக்கு புறப்பட்டார்.
கந்தசாமி மோட்டார் சைக்கிளில் அவரை பஸ் ஏற்றுவதற்காக அழைத்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கந்தசாமி, மனுஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சகாதேவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.