செய்திகள்

வடபாதிமங்கலம் அருகே இளம்பெண் மர்ம மரணம்: கணவரிடம் போலீசார் விசாரணை

Published On 2018-07-15 12:53 GMT   |   Update On 2018-07-15 12:53 GMT
இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த புள்ளமங்கலம் ஊராட்சி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது27). தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (22). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. கணவர் ஸ்ரீகாந்த் கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோட்டூர் 3-ம் சேத்தியில் வசிக்கும் கோகிலாவின் பெரியப்பா வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ஸ்ரீகாந்த், கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். அவர்களை அடிக்கடி சமாதானம் செய்து வந்தோம். இந்தநிலையில் கோகிலா இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் கோகிலா மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் வடபாதிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News