செய்திகள்

வாடிப்பட்டியில் இன்று காலை வேன் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2018-07-02 11:15 GMT   |   Update On 2018-07-02 11:15 GMT
வாடிப்பட்டியில் இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

வாடிப்பட்டி:

மதுரை செல்லூர் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது 33). இவர் சிம்மக்கல்லில் உள்ள பழக்கமி‌ஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று விருமாண்டி செல்லூர் அகிம் சாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வத்துடன் ஆந்திர மாநிலத்திற்கு மாம்பழங்கள் வாங்கச் சென்றார். அங்கு மாம்பழங்கள் வாங்கி விட்டு அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று காலை 6.30 மணி அளவில் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தில் வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் செல்வம், முன்னால் சென்ற லாரியை சரியாக கவனிக்க வில்லை. இதனால் வேக மாகச் சென்ற வேன் எதிர் பாராத விதமாக லாரியின் மீது மோதியது.

இதில் வேனின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. விருமாண்டி இருக்கையிலேயே பிணமானார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீசார் விரைந்துச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News