search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் விபத்து"

    • தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
    • 2 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அடிமாலி மாங்குளம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

    இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்டு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

    • விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
    • விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
    • பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் பகுதியில் வசித்து வருபவா் விருதுநகரை சோ்ந்த ஞானராஜ் (வயது 55), பாத்திர வியாபாரி. இவா், சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஞானராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
    • திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும்.

    தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

    இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    திம்பம் மலைப்பகுதி 8-வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

    வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    பிறகு பண்ணாரி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை ஜே.சி.பி. மூலம் அப்புறப் படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் 4 டன் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலை தடு மாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் விசாரணை
    • மின்ஒயர்களும் அறுந்து சேதமானது

    வந்தவாசி:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங் கடேசன் (வயது 30), வேன் டிரைவர்.

    இவர் நேற்று அதி காலை வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில், இளங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது சாலையோரம் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிரெயிலர் மீது வேன் மோதியது.

    அதன்பிறகும் நிற்காத வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமாகி கம்பிகளும் அறுந்து விழுந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் வெங்கடேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    மின்கம்பம் சேதமடைந்து மின்ஒயர்களும் அறுந்ததால் இது குறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 30). இவர் நண்பர்களுடன் காரில் நேற்று வாணியம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (24). இவர் கூரியர் வேனை ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது முன்னாள் உமேஸ்வரன் ஓட்டி சென்ற கார் மீது சஞ்சய் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. வேன் கவிழ்ந்தது.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காரும், கூரியர் வேனும் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்தவர் சாமியுல்லா.

    இவர் தனது மனைவி மாமனார் மாமியார் குழந்தைகளுடன் ேவனில் சென்னைக்கு சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலா முடிந்து இன்று காலை வேனில் வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    வேன் சத்துவாச்சாரியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. நாய் மீது வேன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறபடுத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை.
    • சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். சாலவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

    ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் தொழிலாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏரிக்கரையோரத்தில் வேன் கவிழ்ந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. குறைந்த அளவு தண்ணீரே அங்கு இருந்தது. ஆனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கரையோரத்தை தாண்டி கூடுதல் தூரத்தில் வேன் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

    தற்போது அதிர்ஷ்டவசமாக அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்ப் மோட்டார் பழுதானதால் விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்

    செய்யாறு:

    திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து சிலர் வேனில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    பஸ் நிலையம் பின்புறம் பங்களா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இறக்கினர். அப்போது வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்து கொண்டி ருந்தார். திடீரென செல்ப் மோட்டார் எரிந்து கியரில் இருந்து வேன் தானாக ஓடியது. உடனே சுதா ரித்து கொண்ட டிரைவர் வேனில் இருந்து கீழே இறங்க முயன்றார்.

    அதற்குள் அருகே இருந்த சாலையோர தடுப்பு மீது வேன் மோதி நின்றது. பின்னர், வேன் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதற்கிடையில், வேன் தானாக ஓடியதால் அங்கி ருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் னர், மண்ணை வாரிதூவி என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    மேலும், செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வருவ தற்குள் அங்கிருந்த மக்கள் நீரை ஊற்றி வேன் என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து, வேனில் பழுது ஏற்பட்ட செல்ப் மோட்டார் மாற்றப்பட்டு தயார் நிலைக்கு வந்தது. மேலும், வேனில் யாரும் இல்லாதபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பழைய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55) தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அக்ராவரம் -பெல் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போக்குவரத்து பதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஏலகிரி மலைக்கு மினி வேனில் சுற்றுலா வந்தனர்.

    வேனை ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திப்குமார் (வயது 34) ஓட்டினார். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று மாலை 7 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர். 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வாலாஜா குடிமல்லூர் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி சாந்தி (65), காட்பாடி தொப்பலாம் மோட்டூரை சேர்ந்த ராம்குமார் (27), எம்பெருமாள் (41) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 17 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

    தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலையின் நடுவில் மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

    ×