செய்திகள்
குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம்
குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் மோர்தனா வன பகுதியை யொட்டி உள்ள போடியப்பனூர் கிராமத்திற்குள் நேற்று இரவு 5 யானைகள் புகுந்தன.
சாமி என்பவர் வாழை தோப்பிற்குள் புகுந்த யானை கூட்டம் அங்கு வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தது.
இது குறித்து தகவலறிந்த வனசரக அலுவலர் சங்கரய்யா, வனவர் அரி, உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேள தளம் அடித்தும் யானை கூட்டத்தினை வன பகுதியில் விரட்டியடித்தனர்.
யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.