செய்திகள்

வேலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2018-06-16 12:50 GMT   |   Update On 2018-06-16 12:50 GMT
வேலூர் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்:

வேலூர் அடுத்த ஒடுகத்தூர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மின் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட் டோர் இன்று காலை குருவ ராஜபாளையம்-ஆசனாம் பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் கிடை க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News