செய்திகள்
ஆற்காடு பஸ் நிலையம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்துச்சென்ற சம்பவம் ஆற்காடு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு:
ஆற்காடு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 69). இவர் ஆற்காடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து நடந்து வந்த 3 வாலிபர்கள் ‘‘நாங்கள் போலீஸ் என்றும் இந்த பகுதியில் வழிப்பறி நடந்துள்ளது. எனவே நீங்கள் அணிந்துள்ள தங்க நகைகளை பத்திரமாக பையில் வைத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய தனலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் செயினை கழட்டி பையில் வைத்தார்.
அப்போது அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து தனலட்சுமி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். #Tamilnews
ஆற்காடு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 69). இவர் ஆற்காடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து நடந்து வந்த 3 வாலிபர்கள் ‘‘நாங்கள் போலீஸ் என்றும் இந்த பகுதியில் வழிப்பறி நடந்துள்ளது. எனவே நீங்கள் அணிந்துள்ள தங்க நகைகளை பத்திரமாக பையில் வைத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய தனலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் செயினை கழட்டி பையில் வைத்தார்.
அப்போது அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து தனலட்சுமி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். #Tamilnews