செய்திகள்

விபத்தில் மீனவர் பலி- பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது

Published On 2018-06-06 08:28 GMT   |   Update On 2018-06-06 08:28 GMT
சாயல்குடி அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இது குறித்து பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சாயல்குடி:

சாயல்குடி அருகே உள்ள தெற்கு மூக்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 28) மீனவர். நேற்று இரவு நரிப்பையூரில் இருந்து சாயல்குடிக்கு செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மாணிக்கம் நகர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அதனை செல்வகுமார் சரியாக கவனிக்கவில்லை. இதனால் பஸ்சின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவருடைய சகோதரர் திருமேணி சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (42) கைது செய்யப்பட்டார்.

பலியான செல்வ குமாருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News