செய்திகள்

திருப்பூர் பனியன் கம்பெனி விடுதியில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-05-21 12:00 GMT   |   Update On 2018-05-21 12:00 GMT
திருப்பூர் பனியன் கம்பெனி விடுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

அரியலூர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகள் செம்பருத்தி (வயது 17).

இவர் திருப்பூர் மண்ணரையில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த செம்பருத்தி கடந்த வாரம் ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது பெற்றோர் கூறினர்.

ஆனால் செம்பருத்தி திருமணத்திற்கு மறுத்து வந்தார். ஆனாலும் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செம்பருத்தி திருப்பூருக்கு வேலைக்கு வந்து விட்டார். நேற்று விடுமுறை என்பதால் செம்பருத்தி மட்டும் விடுதியில் தங்கியிருந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் அவரின் நடமாட்டம் இல்லாததால் அவரது தோழிகள் விடுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது செம்பருத்தி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செம்பருத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News