செய்திகள்

தன்னாட்சி அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பு - மு.க ஸ்டாலின்

Published On 2018-05-16 14:40 GMT   |   Update On 2018-05-16 14:40 GMT
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், தன்னாட்சி அதிகாரமில்லாத அமைபு விசை ஒடிந்த அம்பு போன்றது என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CauveryIssue #MKStalin
சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசு சில திருத்தங்களை கோரியிருந்தது. இதனை அடுத்து, இந்த விவகாரம் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மேலாண்மை வாரியம் இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தன்னாட்சி அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பை போன்றது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவு திட்டத்தில் தன்னாட்சி மிக்க, மேலாண்மை வாரியம் அமைவதை உறுதிசெய்ய வேண்டும்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News