செய்திகள்

அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை கூட்ட மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2018-05-14 12:19 GMT   |   Update On 2018-05-14 12:19 GMT
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #CauveryIssue #MKStalin
சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை கண்காணிப்பது இந்த அமைப்பின் பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மட்டும் இருந்தால் மட்டுமே அதனை தமிழகம் ஏற்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:-

காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News