செய்திகள்

கூடலூரில் யானை தாக்கி மூதாட்டி பலி

Published On 2018-04-26 11:46 GMT   |   Update On 2018-04-26 11:46 GMT
கூடலூரில் இன்று காலை யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது பாட்டி சின்னகருப்பாயி(83). இவர் இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வனப்பகுதியை ஒட்டிய பகுதிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த ஒரு யானை மூதாட்டி சின்னகருப்பாயியை தலையில் தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னகருப்பாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தெரியவந்ததும் கூடலூர் வனத்துறை ரேஞ்சர் ராமகிருஷ்ணன் மற்றும் தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சின்னகருப்பாயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News