செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தற்காலிக அனுமதி

Published On 2018-04-19 11:11 GMT   |   Update On 2018-04-19 11:11 GMT
சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வரும் பக்தர்கள் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கோவிலுக்கு வெளியே செல்போன்களை பாதுகாக்க லாக்கர் வசதி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதன் காரணமாக செல்போன் லாக்கரில் போதிய இடமில்லை. இதன் காரணமாக, சித்திரை திருவிழா முடியும் வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. #TamilNews
Tags:    

Similar News