வடமதுரை அருகே வியாபாரியை குத்தி கொல்ல முயன்ற ரவுடி
வடமதுரை:
வடமதுரை அருகில் உள்ள வளவிசெட்டிபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது42). மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு தனது வீட்டு முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது பாய்ந்து கத்தியால் குத்தினர். உடனே திடுக்கிட்டு பாலசுப்பிரமணி எழுந்து சத்தம்போட்டார். வீட்டில் தூங்கிய அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். பொதுமக்கள் சுற்றி வளைத்து ஒருவரை பிடித்தனர்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பாலம் பூசாரியூரை சேர்ந்த காளிபெருமாள் (22) என தெரிய வந்தது.
இவர் சிறுமி கற்பழிப்பு வழக்கில் தொடர் புடையவர். இவருடன் வந்த நபர்கள் குற்ற வழக்குகளில் சம்மந்த பட்டவர்கள். வியாபாரியை குத்தி கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட காளிபெருமாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தப்பி ஓடிய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.