செய்திகள்

கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கணவன்-மனைவி கைது

Published On 2018-04-17 11:38 GMT   |   Update On 2018-04-17 11:38 GMT
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

கோவை:

கோவை கொடிசியா அருகே மண்டல அறிவியல் மையம் பகுதியில் 2 பேர் நின்று கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு ஆணும், பெண்ணும் நின்று கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கவுண்டம்பாளையம் சாந்தி நகரை சேர்ந்த சொக்கநாதன் (55), அவரது மனைவி சுகுணா (47) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான கணவன்-மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News