செய்திகள்

பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2018-04-17 11:12 GMT   |   Update On 2018-04-17 11:12 GMT
பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் பாவடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ஈஸ்வர்சிங் (வயது 21) என்ற வாலிபரையும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 1852 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News