செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-12 13:02 GMT   |   Update On 2018-04-12 13:02 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். 

மாவட்ட அமைப்பு செயலாளர் இளையராஜா கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் மாவட்ட துணை தலைவர் தமிழழகன், மகளிர் அணி தலைவி முத்தம்மாள், மாவட்ட செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News