search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஒன்றியத்தில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பணி மூப்பின் படி பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி. பாபு தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கலைவாணன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் சங்கர் எம் சிவக்குமார் ஸ்ரீ அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொறுப்பாளர் ஜே.மாத்தேயு, தொடங்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசின் குழுநில மன்னர்களை வைத்து வரி வசூல் செய்வதை போல சில வட்டார கல்வி அலுவலர்களை வைத்து வசூல் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க) கண்டித்தும் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என் ஞானசேகரன் மாவட்ட செயலாளர் சினிவாசன், ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு பரசுராமன் ஒன்றிய தலைவர்கள் ரமேஷ் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வர்பாபு வரவேற்றார். மாநில துணை தலைவர் நரசிம்மன், முன்னாள் மாநில தலைவர் சென்னப்பன், முன்னாள் மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், முன்னாள்மாவட்ட செயலாளர் அமர்நாத், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர்சி றப்புரையாற்றினார்கள்.

    மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பிரபாகரன், மாவட்ட சட்ட செயலாளர் திம்மப்பா,செய்தி தொடர்பு செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் ஜெயராமன், வெங்கடாசலம், பரந்தராமன், இணை செயலாளர்கள் சின்னசாமி, ஜெயசந்திரன், ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்க கூடாது. ஜூலை 1-ந் தேதியில் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டள்ள இ.எல். சரண்டர் ஐ ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×