search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்புதொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்புதொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஒன்றியத்தில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பணி மூப்பின் படி பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×