செய்திகள்

கோத்தகிரியில் 6 மணி நேரம் நீடித்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-04-12 09:54 GMT   |   Update On 2018-04-12 09:54 GMT
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

கோத்தகிரி, அளக்கரை, அரவேனு, கட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இந்த மழை நீடித்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த மழை அதிகாலை 4 மணி வரை பெய்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக கோத்தகிரியில் குளிர் நிலவியது. இந்த மழை தேயிலை, மலை காய்கறி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கோவையிலும் நேற்று இரவு மழை பெய்தது. கோவை புறநகர் பகுதியான வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. கோவை மாநகர் பகுதியில் லேசான தூறல் அடித்தது.

மழை காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

Tags:    

Similar News