பூமார்க்கெட்டில் பூ கட்டும் தொழிலாளிக்கு கத்திரிக்கோல் குத்து: 2 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேரந்தவர் சிவா (வயது 30). இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பூமார்க்கெட்டில் பூ கட்டும் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பூமார்க்கெட்டில் பூ கட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள கடையில் போத்தனூரை சேர்ந்த ரசீத் (32), உக்கடத்தை சேர்ந்த பீம் (34) ஆகியோர் அதே வேலையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிவாவின் கை ரசீத் மீது பட்டது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ரசீதுக்கு ஆதரவாக பீம் வந்தார். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்த சிவாசின் நெஞ்சில் கத்திக்கோலால் குத்தினார். அதிர்ச்சியடைந்த சிவா அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் ரசீது, பீம் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.