செய்திகள்

அவனியாபுரத்தில் பெண் டெய்லரிடம் நகை பறிப்பு

Published On 2018-01-20 11:20 GMT   |   Update On 2018-01-20 11:20 GMT
அவனியாபுரத்தில் பெண் டெய்லரிடம் 4 பவுன் நகையை மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரத்தை அடுத்த அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது33). மதுரையில் உள்ள தையல் கடையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து தமிழ்ச்செல்வி வீட்டுக்கு புறப்பட்டார்.

சிந்தாமணி மெயின் ரோடு கண்ணன் காலனி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்தனர். அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தமிழ்ச்செல்வியை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, ஏட்டுகள் ராஜபாண்டி, முனியாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News