search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவனியாபுரம்"

    • அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பைபாஸ்ரோடு, அவனியாபுரம் பஸ்நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மா காலனி, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மதுரை மேற்கு செயற்பொறியாளர் மோகன்(பொறுப்பு) தெரிவித்துள்ளார். 

    • அவனியாபுரத்தில் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    • 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி ஜல்லிக் கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ள ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்குமிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டி யின் முக்கிய அம்சமாக விளங்கும் வாடிவாசல் அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகிய இருவரது குடும்பத்தினர் 400 வருடங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதைெயாட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா விமல், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் முத்துப் பாண்டி, வருவாய் அலுவலர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலா, உதவி பொறியாளர் செல்வ விநாயகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், கல்யாணராமன், கல்யாணசுந்தரம், சிவமணி, முனியசாமி, சுந்தர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அவனியாபுரம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    • அவனியாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், சொக்கு நகர், ஜெயபாரத் சிட்டி 4 மற்றும் 5, பை-பாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், மண்டேலாநகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோன்று அவனியாபுரம் துணை மின் நிலையம் போலீஸ் நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியசாமிநகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர்.நகர்,முல்லை நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி ஆகிய இடங்களில் நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    ×