செய்திகள்

டெல்லியில் தமிழக மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2018-01-17 08:08 GMT   |   Update On 2018-01-17 08:08 GMT
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிலும் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Delhiaiims #GKVasan
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த திருப்பூர் மாணவர் சரத்பாபு மர்மமான முறையில் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. அவர் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என்பது பற்றி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.



தலைநகர் டெல்லியில் படிப்பும், பாதுகாப்பும் சிறப்பாக இருக்கும் என்று கருதிதான் வெளிமாநில மாணவர்கள் அங்கு சென்று படிக்கிறார்கள். ஏற்கனவே திருப்பூர் மாணவர் சரவணன் இறந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதற்குள் இது 2-வது சம்பவம். தமிழக மாணவர்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், டெல்லி அரசும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News