என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Vasan"

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
    • எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

    ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1905-ம் ஆண்டில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது. பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

    தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
    • தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.

    பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
    • அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கடந்த 16-ந்தேதி தமிழகத்தில்; இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது கடந்த 18-ந்தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.

    பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.

    எனவே, அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தமிழருவி மணியன் தொடங்கினார்.
    • காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.

    காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இதனிடையே, தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.

    ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியன் முக்கிய நிர்வாகிகளுடன் காமகவை தமாகாவில் இணைத்தார். அப்போது பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம்" என்று தெரிவித்தார்.

    தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.
    • அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே வாசன் தலைமை தாங்கினார்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டிசம்பர் 20-ம் தேதி காமராஜர் மக்கள் கட்சி த.மா.கா.வுடன் இணைகிறது. காமராஜர் மக்கள் கட்சியில் மரியாதைக்குரியவர்கள் உள்ளனர். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழருவி மணியன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    20-ம் தேதி காலை திண்டலில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. 3000 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    த.மா.கா மாவட்ட மாநில மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகள் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இதனை குடும்ப விழாவாக தேர்தலில் த.மா.கா.வுக்கு பலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையும்.

    திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சிறுபான்மை மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் களமாக்க நினைக்கிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் பேசி வைத்து கொண்டு செய்கிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

    தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.

    தேர்தலுக்கான அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியல்.

    ஜி.ஆர். சாமிநாதன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு "சட்டத்திற்கு உட்பட்ட நாடு. தி.மு.க நீதிமன்றத்தை அரசியல் களமாக்க நினைக்கிறது. இது தவறான செய்கையை காட்டுகிறது.

    தி.மு.க. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க அரசு தடையாக உள்ளது.

    அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.

    மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி வாக்கு வங்கியை வாங்கிக்கொண்டு 5 ஆண்டுகள் மக்களின் பணத்தை சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.

    தோல்வி பயத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழக அரசு மீது வாக்காளர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க தலைமையில் வலுவாக உள்ளது.

    தேசிய ஜனநாயகக்கூட்டணி வெல்வதற்காக காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

    கூட்டணி கட்சிகள் கூட்டுவதற்காக நேரம் காலம் உள்ளது. ஆளும்கடசியினர் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

    நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்பார்க்கிறோம்.

    கூட்டணியில் இருப்பதால் எங்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்ததை கண்டிக்கிறது என்றார்.

    பேட்டியின் போது பொதுச்செயலாளர் யுவராஜா, மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
    • தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணை பிரச்சனையில் மெத்தனப் போக்காக இருக்கிறது.

    இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடகா அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதோடு தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.
    • தமிழருவி மணியன் பின்னாளில் காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

    காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைப்பதாக அறிவித்தார். 

    தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
    • இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கபடி அணி இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    இறுதிப்போட்டியில் 35- 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று உலக அரங்கில் இந்திய மகளிரின் விளையாட்டு வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள். மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றதால் ஒட்டு மொத்ததேசமும் பெருமை அடைந்துள்ளது.

    மேலும் இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணியின் வீராங்கனைகளுக்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமுற்றன. பல இடங்களில் நெல் அறுவடை முடியும் தருவாயில் தற்போது பெய்த மழையால் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டு, நெல்லும், சில இடங்களில் பருத்தியும் சேதமடைந்துள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பற்றி பேசினார்.
    • எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, அனைத்து துறைகளில் வளர்ச்சி தேக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது. இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சியினரின் அநாகரிகமான போக்கை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
    • அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம். தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.

    அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை. தமிழக அரசு தேர்தல் நேர வாக்குறுதியையும், அரசுப் போகுவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களின் பணிக்காலத்தையும், உழைப்பையும், போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
    • தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

    எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×