செய்திகள்
நாமக்கல்லில் திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசியதாக கூறி அதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி அதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க. தாழ்த்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் ஏ.கதிரேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதை கண்டித்தும், அவரை தேசவிரோத வழக்கில் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, கோட்ட பொறுப்பாளர் ஏ.சி.முருகேசன், பொதுச் செயலாளர் முத்துக்குமார், தேசிய குழு உறுப்பினர் மனோகர், நகர லைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.