search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதீய ஜனதா"

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.

    இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

    ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

    குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    • வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது என எம்.எல்.ஏ. பேசினார்.
    • ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் மற்றும் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. வட்டார தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜாமணி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா தனது ஆட்சியின் அவலங்களை மறைக்க ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கை போட்டு மாபெரும் தவறை செய்து கொண்டிருக்கிறது. இதன் எதிர் விளைவை அவர்கள் உணரக் கூடிய நிலை சீக்கிரம் வரும்.

    வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது. நாடு பிளவுபடாமல் தடுக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதியோர் இல்ல நிர்வாகிகள் பிரேம்குமார், ஷேக்னா லெப்பை, இ.சி.ஐ. சேர்மன் அந்தோணி, சேகர தலைவர்கள் ஆறுமுகநேரி சுதாகர், மடத்துவிளை சிமியோன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு தலைவர் ராஜகுமார், மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜகுமாரன்,

    மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவகணேசன், சுந்தரகுருசாமி, நகர செயலாளர் மாடசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேகர், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, காங்கிரஸ் தியாகிகள் வாரிசு மாநில துணைத்தலைவர் தவசிமுத்து,

    வட்டார செயலாளர்கள் சாலமோன் ஜெபராஜ், மோகன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், வார்டு செயலாளர்கள் சுடலைமணி, முருகேசன், சிவபெருமாள், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.

    மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணிகளே அதிக வாக்குகள் பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது.

    இதனை உண்மையாக்கும் வகையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இத்தொகுதியில் பாரதீய ஜனதா 3-வது இடத்தில் இருந்தது.



    ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது கண்ணூர், காசர்கோடு, சாலக்குடி தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்தது.

    கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி.யாக இருந்த நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதி பாரதீயஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனால் அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதாபன் 2,500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு வேட்பாளர் மேத்யூ தாமசும், 3-வது இடத்தில் சுரேஷ்கோபியும் இருந்தனர்.

    சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கும் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் 3-வது இடத்தில் இருந்தார்.

    திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் அதிக வாக்குகள் பெற்றார். சில மணி நேரத்தில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னுக்கு தள்ளினார். முதல் சுற்று முடிவில் சசிதரூர் 4,695 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியுள்ளார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராசபாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக உழைக்கும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார். அவர் பெண்களின் குறைகளை நன்கு அறிந்து புரிந்தவர். எனவே பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.


    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் இது சந்தர்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் இருப்பதாக கவர்னரிடம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மனு கொடுத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த பகுதியில் சடையனேரி மற்றும் கன்னடியன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது.

    இப்போது கன்னடியன் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதைப்போல் சடையனேரி கால்வாய் வலுவாக இருக்க வேண்டும். நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நிச்சயமாக ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். எனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்திட மத்தியிலிருந்து அதிக நிதி பெற்றிட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

    இந்த பகுதிக்கு மயான இட வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நானே நேரில் வந்து இடம் வசதி செய்து தருவேன். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி. கனிமொழியை குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவில் 4 மந்திரிகள் உள்ளிட்ட 43 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. #RajasthanAssemblyElections #RajasthanElections

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    ராஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதா ஏற்கனவே 131 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.

    நேற்று 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், 31 வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அதன்படி இது வரை 162 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 43 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அதில், 4 பேர் மந்திரிகள் ஆவர்.

    இதுவரை வந்த பட்டியல் படி 92 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைத்துள்ளது. மேலும் பா.ஜ.க.வில் முஸ்லிம்கள் யாருக்கும் இதுவரை டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    கடந்த தேர்தலில் பல முஸ்லிம் வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

    இன்னும் அடுத்த பட்டியல் வர இருக்கிறது. அதில் இடம் அளிக்கப்படுமா? என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் யாருக்கும் டிக்கெட் வழங்காதது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    இதற்கு பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி பதில் அளிக்கும் போது, ஜாதி, மதம் பார்த்து டிக்கெட் வழங்குவது காங்கிரசின் கொள்கை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை இந்த கொள்கையை பின் பற்றுவதில்லை என்று கூறினார். #RajasthanElections #RajasthanAssemblyElections

    பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #bjp

    திருச்சி:

    பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட முன்னாள் தலைவர் பார்த்திபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக ஏற்பாடு தான் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, முக்கொம்பில் மிக விரைவில் புதிய அணை கட்ட வேண்டும். காவிரி ஆற்றில் இரவு, பகலாக மணல் அள்ளியதன் விளைவு தான் கொள்ளிடம் அணை உடைய காரணம் என தெரியவந்துள்ளது.

    ஆகவே மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தடுப்பணைகள், பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் 10 கி.மீட்டர் தொலைவுக்கு மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

    மத்திய அரசு திருச்சி மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்தது அல்லாமல் பல கோடிரூபாயை நகர் வளர்ச்சிக்கும், தூய்மைக்கும் நிதி ஒதுக்கியும் மாநகரில் தாராநல்லூர், மேலசிந்தாமணி, வெனீஸ்தெரு உள்பட பல பகுதிகளில் சாக்கடைகளில் குப்பைகள் தேங்கி கழிவு நீர் செல்ல முடியாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ள புதிய முனையத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ரெங்கராஜன் குமாரமங்கலம் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #bjp

    ×