செய்திகள்

பூதலூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2017-12-05 11:38 GMT   |   Update On 2017-12-05 11:38 GMT
பூதலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிஏசுபாலன் (வயது47) கூலித் தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் சானூரப்பட்டி கடைவீதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி புஷ்பா (40) கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News