செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்தார்

Published On 2017-12-04 12:58 GMT   |   Update On 2017-12-04 12:58 GMT
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

பிரதான கட்சிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான இன்று மாலைவரை 3 பெண்கள் உள்பட மொத்தம் 70 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 7-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21-ம் தேதி பதிவாகும் வாக்குகள் 25-ம் தேதி எண்ணப்பட்டு பிற்பகல் வாக்கில் முடிவுகள் வெளியாகும்.
Tags:    

Similar News